மார்கிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் கே.வரதராஜன் அவர்கள் கரூரில் உள்ள அவரது மகள் வீட்டில் இன்று காலமானார்.
மார்கிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய குழு உறுப்பினருமான தோழர் கே.வரதராஜன் அவர்கள் இன்று கரூரில் உள்ள அவரது மகள் வீட்டில் காலமானார். 73 வயதான அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்திருந்த நிலையில் இன்று அவர் இயற்கை எய்தினார்.
இவர் மார்க்சிஸ்ட் காட்சியின் பல்வேறு பதவிகளில் வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, முதலில் திருச்சி வட்டக்குழு செயலாளராக பணியாற்றினார்.அதன் பின்னர் தான் மாநில செயற்குழு உறுப்பினராக திறம்பட செயலாற்றினார்.
இவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராகவும் பதவிவகித்துள்ளார். அதன் பின்னர் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் பணியை மேற்கொண்டுள்ளார். அதே விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தோழர் கே.வரதராஜன் தத்துவ தரிசனம் என்கிற நூலையும், கிராமப்புற விவசாய இயக்கம் தொடர்பான பல சிறு புத்தகங்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோழர் கே.வரதராஜனின் நல்லடக்கம் நாளை திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…