பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
இதனால் இந்தியா உட்பட 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. ஆயினும் இந்த புதிய கொரோனா வைரஸ், உலக நாடுகளில் பரவிவருகிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 28 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
அதாவது, இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, அவர்களுடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உருமாறிய கொரோனா தொற்று உள்ளதா என்பதை மத்திய அரசுதான் அறிவிக்கும் என விளக்கம் அளித்தார். மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என கூறினார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…