Karukka Vinoth [File Image]
கடந்த அக்டோபர் 25ஆம் தேதி புதன்கிழமை அன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முதல் கேட் அருகில் பேரிகாட் (தடுப்பு) மீது கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் பாட்டில் வீசினார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த சமயம் அருகில் இருந்த சென்னை பெருநகர காவல்துறையினர் கருக்கா வினோத்தை உடனடியாக கைது செய்து அவரிடம் இருந்து மேலும் 2 பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை பரிமுதல்செய்தனர். கைது செய்யப்பட்டு அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.
ஆளுநர் பாஜககாரர்.. ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகம்.! முதல்வர் பரபரப்பு குற்றசாட்டு.!
அவர் ஆளுநர் மாளிகை நோக்கி பெட்ரோல் பாட்டில் வீசவில்லை. கருக்கா வினோத் தனியாக தான் இந்த சமபவத்தை செய்துள்ளார். கருக்கா வினோத் எங்கும் தப்பியோடவில்லை. கருக்கா வினோத்தை ஆளுநர் மாளிகை ஊழியர்கள் யாரும் பிடிக்கவில்லை. சென்னை பெருநகர் காவலர்கள் தான் பிடித்தார்கள் என சிசிடிவி காட்சிகளை கொண்டு தமிழக காவல்துறையினர் விளக்கம் அளித்து இருந்தனர்.
இந்நிலையில், தான் கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க தமிழக காவல்துறை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. பெட்ரோல் பாட்டில் வீச்சு தொடர்பாக மேலும் விசாரணை செய்ய வேண்டும் என நீதிமன்ற காவலில் இருந்த கருக்கா வினோத்தை காவல்துறை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க கோரியது.
இந்த வழக்கு இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கருக்கா வினோத்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…