இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால், மத்திய மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வருகிறது. அதன்படி வரைஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், மக்கள் யாரும் வேலைக்கு செல்ல இயலாததால் வீட்டிலேயே முடக்கப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசு பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவித்து வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு பயிர்க்கடன், சொத்துவரி போன்றவை செலுத்துவது தொடர்பாக பல்வேறு சலுகைகளை அளித்துள்ளது. அதாவது கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தங்களது மதத் தவனையை செலுத்த 3 மாத கால அவகாசம் நீடிக்கப்படுகிறது என அறிவித்துள்ளது. அதேபோல் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.200 கோடி கடனுதவி மற்றும் தங்கள் மாத தவணையை செலுத்த 3 மாத கால அவகாசம் என பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் வாகன ஓட்டுநர் உரிமங்கள், தகுதி சான்றுகளை (FC) புதுப்பிக்க ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…