PMModi [Image source : ANI]
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஓனங்குட்டை பகுதியில் இருந்து சுமார் 15க்கும் மேற்பட்டோர் வேனில் சுற்றுலாவுக்கு புறப்பட்டுள்ளனர். அப்போது வேன் சண்டியூர் அருகே பஞ்சராகி நின்றுள்ளது. உடனே சாலையில் நிறுத்தி ஓட்டுநர் பஞ்சர் பார்த்துள்ளார்.
வேனில் பயணித்தவர்கள் வேனுக்கு அருகே அமர்ந்து ஓய்வெடுத்துள்ளனர். அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த லாரி ஒன்று வேன் மீது மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிரந்தர மோடி ஆறுதல் கூறி நிதியுதவி அறிவித்துள்ளார்.
அதன்படி, “தமிழகத்தின் திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிர் இழந்தது வருத்தமளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
லண்டன் : டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025 இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட்…
இஸ்ரேல் : நேற்று (13.06.2025) அதிகாலை “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில்…
சென்னை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள், காவல் நிலையத்தைத்…
அமெரிக்கா : ரியாக்சன் கொடுப்பதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான யூடுயூபர்களில் ஒருவர் 'ஐ ஷோ ஸ்பீடு'. இவர் ரன்னிங் ரேஸிலும்…
டெல்லி : நீட் UG 2025 தேர்வு கடந்த மே மாதம் 4-ஆம் தேதி பிற்பகல் 2:00 மணி முதல்…