தமிழகத்தில் ஐந்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையினை ரூ.1,500 -லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்க நிர்வாக ஒப்புதல் மற்றும் ரூ.31,07,91,000 நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
“ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கான பதிலுரையில் 07.01.2022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை குறித்து பின்வருமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது:
“கடுமையான இயலாமை, கடுமையான அறிவுசார் குறைபாடு, தசைச்சிதைவுகள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்புத் தொகையாக வழங்கப்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய ரூ.1500 இனி ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.இதன் மூலம் 2,06,254 பேர் பயனடைவார்கள்.இதனால்,அரசுக்கு ஆண்டொன்றிற்கு 123 கோடியே 75 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும்” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும்,மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் கீழ்காணும் 5 வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1500 மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், இத்திட்டத்திற்கு வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு அதற்கேற்றவாறு செலவினங்கள் மேற்கொள்ள மாநில ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளார்:
இந்நிலையில்,ஐந்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையினை ரூ.1,500 -லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்க நிர்வாக ஒப்புதல் மற்றும் ரூ.31,07,91,000 நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…