#Breaking:மகிழ்ச்சி செய்தி…இவர்களுக்கான உதவித்தொகை ரூ.2,000 ஆக உயர்வு – தமிழக அரசு அரசாணை!

Published by
Edison

தமிழகத்தில் ஐந்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையினை ரூ.1,500 -லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்க நிர்வாக ஒப்புதல் மற்றும் ரூ.31,07,91,000 நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

“ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கான பதிலுரையில் 07.01.2022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை குறித்து பின்வருமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது:

“கடுமையான இயலாமை, கடுமையான அறிவுசார் குறைபாடு, தசைச்சிதைவுகள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்புத் தொகையாக வழங்கப்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய ரூ.1500 இனி ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.இதன் மூலம் 2,06,254 பேர் பயனடைவார்கள்.இதனால்,அரசுக்கு ஆண்டொன்றிற்கு 123 கோடியே 75 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும்” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும்,மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் கீழ்காணும் 5 வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1500 மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், இத்திட்டத்திற்கு வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு அதற்கேற்றவாறு செலவினங்கள் மேற்கொள்ள மாநில ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளார்:

  1. மனவளர்ச்சி குன்றியவர்கள்.
  2. கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள்.
  3. தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்
  4. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்
  5. முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள்,பார்கின்சன் நோய்,தண்டுவட மரப்பு நோய் ஆகிய பாதிப்புக்குள்ளானவர்கள்.

இந்நிலையில்,ஐந்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையினை ரூ.1,500 -லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்க நிர்வாக ஒப்புதல் மற்றும் ரூ.31,07,91,000 நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

6 minutes ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

46 minutes ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

2 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

3 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

4 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

4 hours ago