வாகன விபத்தில் மரணமடைந்த காவலர்  குடும்பத்திற்கு  7,14,000 ரூபாயை அளித்து உதவிய சக காவலர்கள்…

Published by
Kaliraj
வாகன விபத்தில் இறந்த சீர்மிகு காவலர் அமரர்.ராம்கி என்பவரது  குடும்பத்திற்கு  7,14,000 லட்ச ரூபாய் பணத்தை வீடு தேடி சென்று வழங்கிய சக காவலர்களின் மனித நேய உள்ளம்.
செங்கல்பட்டு மாவட்டம் மெய்யூரை சேர்ந்தவர் ராம்கி என்பவர். இவர்  கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வில் தேர்வாகி தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். பின் இவர் சென்னை ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த மே மாதம் 3-ஆம் தேதி இரவு, பணி முடித்து தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் காவலர் ராம்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனை அறிந்த 2013-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த அனைத்து காவலர்கள் மற்றும் சக காவலர்கள் சமூக வலைதளங்களான டெலகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலமாக இந்த விவரத்தை பதிவிட்டுள்ளனர். இதை தொடர்ந்து காவலர்கள் தங்களால் இயன்ற பண உதவியை ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தி வந்தனர். அவ்வாறு செலுத்தப்பட்ட பணம் ரூபாய் 7.14 லட்சம் சேர்ந்தது. இதை ராம்கி அவர்களின் குடும்பத்தாரிடம்  மே 20-ஆம் தேதி  அந்தப் பணத்தை ஒப்படைத்தனர். இந்த மனித நேயமிக்க செயல் காவலர்களின் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இவர்களின் இந்த சுய முயற்சி அனைத்து காவலர்கள் மீதான மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

6 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

7 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

7 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

8 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

10 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

10 hours ago