#TNAssembly:சட்டப் பேரவையில் இன்று வெளியாகும் மின்சாரத்துறை,வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள்!

Published by
Edison

தமிழகத்தில் சமீப நாட்களாக நிலவிவரும் மின்வெட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.இதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது என்றும்,

ஆனால் மத்திய அரசு குறைந்த அளவே நிலக்கரி தருகிறது என்றும் இதனால்தான் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என்றும் பதில் அளித்தார்.குறிப்பாக,அதிமுக ஆட்சியிலும் 68 முறை மின்வெட்டு இருந்ததாகவும் கூறினார்.இதனையடுத்து,அதிமுக வெளிநடப்பு செய்திருந்தது.

இந்த நிலையில்,தமிழக சட்டப்பேரவையில் இன்று மின்சாரம்,மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை,திறன் மேம்பாட்டு துறை,தொழிலாளர் நலன் ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகளின் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.அதன்படி எதிர்க்கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளார்கள்.

அந்த வகையில்,தமிழகத்தில் மின்வெட்டை தவிர்க்க மின் உற்பத்தியை அதிகரிப்பது,மின்சார கொள்முதல்,துணை மின் நிலையங்கள்,பழைய மின் மாற்றிகளை மாற்றி புதிய மின்மாற்றிகள் அமைப்பது உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட உள்ளார்.

அதே சமயம்,வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்புகள தொழிலாளர் நலன்,திறன் மேம்பாட்டு துறை சார்பில் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recent Posts

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

5 minutes ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

19 minutes ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

56 minutes ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

1 hour ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

3 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

3 hours ago