[Representative Image ]
மின் கட்டணத்துடன் கூடுதல் டெபாசிட் தொகை வசூலிப்பதை தற்போது மின்வாரியம் நிறுத்தி வைத்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மின் பயன்பாட்டாளர்களிடமிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை டெபாசிட் தொகையானது வசூலிக்கப்படும். வசூலிக்கப்படும் டெபாசிட் தொகையை விட அதிக அளவு மின்சாரத்தை பயனாளர்கள் பயன்படுத்தும் போது, அடுத்த முறை டெபாசிட் தொகையானது கூடுதலாக வசூலிக்கப்படும். இந்த கூடுதல் டெபாசிட் தொகை பற்றி அஞ்சல் வாயிலாகவோ, பதிவு செய்யப்பட்ட மின் பயன்பாட்டாளரின் செல்போன் எண்ணுக்கோ மின்வாரியம் தகவல் தெரிவிக்கும்.
இந்த டெபாசிட் தொகையானது தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது. இது மின் கட்டணத்துடன் இந்த டெபாசிட் தொகை வசூலிக்கப்படுவதால் மின் பயன்பாட்டாளர்கள் தற்போது குழப்பம் அடைந்து வருகின்றனர். ஏன் என்றால் தற்போது கோடை காலம் என்பதால் நுகர்வோர்கள் அதிக அளவு மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் டெபாசிட் தொகையோடு இந்த மின் கட்டணமும் சேர்ந்து அதிக கட்டணம் செலுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதற்கு மின் நுகர்வோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.
இதனை தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம், முதல்வரின் அறிவுறுத்தலின் பெயரில் , புதிய நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. அதாவது தற்போது கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிப்பதை மின்சார வாரியம் நிறுத்தியுள்ளது. மேலும் ஏற்கனவே நுகர்வோரிடம் டெபாசிட் தொகை வசூலிக்கப்பட்டு இருந்தால், அந்த தொகையானது அடுத்து வரும் மின் கட்டணத்தில் இருந்து கழித்துக் கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…