வேங்கைவயல் விவகாரம்.! 11 பேரின் டி.என்.ஏ பரிசோதனை நடைமுறை இன்று தொடக்கம்.!

Published by
மணிகண்டன்

புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக இன்று 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. 

கடந்த வருடம் டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் சில மர்ம நபர்கள் மனிதக்கழிவுகளை கலந்துவிட்டனர். குடிநீர் தொட்டியில் மலம் கலந்த இந்த அதிர்ச்சியான சம்பவத்தை முதலில் காவல்துறையினர் விசாரிக்க துவங்கினர்.

அதன்பிறகு, இந்த விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டனர். அவர்கள் சுமார் 100 நாட்களாக விசாரித்து, தற்போது 11 பேரிடம் இறுதி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த 11 பேரில் ஒரு சிலர் தான் குடிநீர் தொட்டியில் மலம் கலந்துள்ளனர் எனவும், குடிநீர் தேக்க தொட்டியில் 2,3 பேரின் மாதிரிகள் இருப்பதாகவும், அதானல் டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு இருந்தது.

11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து இன்று அவர்களும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட உள்ளன. அந்த ரத்த மாதிரிகள் டி.என்.ஏ பரிசோதனை செய்து ஒப்பீடு செய்ய தஞ்சை அல்லது சென்னைக்கு அனுப்பிவைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

6 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

7 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

8 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

8 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

9 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

10 hours ago