உதகையில் சோகம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை!

Published by
Rebekal

உதகையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உதகை அருகே உள்ள புதுமந்து எனும் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய சந்திரனின் மனைவி கீதா. இவர்களுக்கு 16 வயதில் ரக்ஷிதா என்ற மகளும், 11 வயதில் விஷ்வா என்னும் மகனும் உள்ளனர். இந்நிலையில் சந்திரன் கீதா இருவரும் ஒப்பந்த முறையில் காய்கறி தோட்டத்தை எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இவர்கள் யாருமே வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததால் அக்கம்பக்கத்தினர் வீட்டின் அருகே சென்று பார்த்த பொழுது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

ஜன்னல் வழியாக பார்த்தபோது சந்திரன் மற்றும் கீதா ஆகிய இருவரும் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவர்களது பிள்ளைகள் இருவரும் தரையில் உயிரிழந்த நிலையில் சடலமாகவும் கிடந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் புதுமந்து காவல் நிலையத்தில் இது குறித்து தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் வீட்டில் தற்கொலை செய்து உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…

18 minutes ago

திருப்பூரில் பரபரப்பு: இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.!

திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…

32 minutes ago

“சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் உள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி பளிச்.!

சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…

44 minutes ago

ரிஷப் பண்ட்-க்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் – ஐசிசி அதிரடி.!

லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…

46 minutes ago

“இந்தியரின் விண்வெளி பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்” – ஸ்பேஸ் எக்ஸ்.!

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…

2 hours ago

Ostrava Golden Spike : ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா.!

மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…

2 hours ago