தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, நில நிர்வாகம் கூடுதல் ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிசாமி மாற்றப்பட்டு மீன்வளத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கே.எஸ்.பழனிசாமி, கூடுதலாக மீன்வளத்துறை மேலாண் இயக்குனராக பொறுப்பு வகிப்பார் என கூறப்பட்டுள்ளது.
மீன்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண் இயக்குனராக இருந்து வந்த கருணாகரன், பணியிட மாற்றம் செய்து பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோன்று பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் பதவி வகித்த அதுல் ஆனந்த் மாற்றப்பட்டு தொழிலாளர் நல ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குனர் சரவணன், இனி கூடுதலாக தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் பொறுப்பையும் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…