போக்குவரத்து ஊழியர்களுக்கு 10% மட்டுமே தீபாவளி போனஸ் வழங்க முடியும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நவம்பர் 11ஆம் தேதி முதல், சென்னையில் உள்ள 5 இடங்களில் இருந்து 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “தற்போதைய நிதிநிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு 10% மட்டுமே தீபாவளி போனஸ் வழங்க முடியும் என்று தெரிவித்ததோடு போராட்டம் நடத்துவதாக இருந்தால் தொழிற்சங்கங்களுடன் பேச்சு வரத்தை நடத்த தயார் என்று கூறினார்.
அது மட்டுமில்லாமல், பேருந்துகள் இயங்காத காலத்தில் அண்டை மாநிலங்களில் போக்குவரத்து ஊழியர்களுக்கு 50 % சம்பளமே கொடுக்கப்பட்ட நிலையில், முதல்வர் பழனிசாமியின் சிறப்பான நடவடிக்கையால் தமிழகத்தில் முழு சம்பளம் வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…