இளைஞர் ஒருவரை 10 மீட்டர் தூரத்தில் நிற்க வைத்து, சிகிக்சை பார்த்த மருத்துவருக்கு நோட்டிஸ்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் சுமார் 10 மீட்டர் தூரத்தில் ஒரு நாற்காலி வைத்து அதில் நோயாளியை அமர வைத்து தூரத்தில் இருந்தபடி மருத்துவர் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இதுகுறித்து வீடியோ ஒன்று நேற்று வெளியானது. அதில், இளைஞர் ஒருவரை 10 மீட்டர் தூரத்தில் நிற்க வைத்து, மருத்துவர் தான் உட்கார்ந்த இடத்திலிருந்து “டார்ச்” அடித்துப் பார்த்து அவருக்கு சிகிச்சையை அளிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இதுகுறித்து, அம்மாவட்ட சுகாதாரப்பணி துணை இயக்குநர் செந்தில்குமாரைக் கேட்டபோது, இருவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களின் விளக்கத்தைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும் சுமார் ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…