திருச்சி: தவறான மருத்துவ பரிசோதனை அறிக்கை வழங்கிய ஆய்வகத்திற்கு சீல்,ரூ.5 லட்சம் அபராதம்.!

Published by
Ragi

தவறான கொரோனா மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை வழங்கிய  திருச்சி தனியார் மருத்துவ பரிசோதனை ஆய்வகத்திற்கு சீல் வைக்கப்பட்டு, ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்சி உறையூர் குறத்தெரு அருகிலுள்ள ராமலிங்க நகரில் தனியார் மருத்துவ பரிசோதனை ஆய்வகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆய்வகத்தில் காய்ச்சல், நீரிழிவு, தைராய்டு, குழந்தையின்மை, உடல் பருமன் என அனைத்து வகை பரிசோதனைகளும் செய்யப்படும். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸை உறுதி செய்யும் பரிசோதனையை மேற்கொள்ள இந்த ஆய்வகத்திற்கு தான் முதலில் அரசு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக மேலும் 3 ஆய்வகங்களுக்கு அரசு அனுமதி அளித்தது. இந்த நிலை உறையூரில் உள்ள கொரோனா பரிசோதனை ஆய்வகம் தவறான கொரோனா மருத்துவ பரிசோதனை அறிக்கையை தருவதாக புகார்கள் வந்ததை அடுத்து, அந்த ஆய்வகத்தில் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்ய தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் அங்கு மற்ற நோய்களுக்கான பரிசோதனைகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் மாநகராட்சி ஆணையர்கள் அந்த பரிசோதனை ஆய்வகத்திற்கு சீல் வைத்து, ரூ. 5லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் கூறுகையில், கொரோனா பரிசோதனை முடிவுகளை தவறாக அளித்ததற்காக பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் சார்பிலும், ஆய்வகம் செயல்படும் கட்டிடம் சட்ட விதிகளை மீறி கட்டியுள்ளார் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு சார்பிலும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஆய்வகத்திற்கு சீல் வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

15 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

50 minutes ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

1 hour ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

2 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

17 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

18 hours ago