Udhaynidhi Odishaacc [FileImage]
ஒடிசாவிற்கு நேரில் சென்று பார்த்தபின், தகவல் தெரிவிக்கப்படும் என ஒடிசா பயணத்திற்கு முன் அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவின் பாஹனகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.20 மணி அளவில் பெரும் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 233 பேர் உயிரிழந்ததாகவும், 900-க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விபத்து குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா புறப்பட்டார்.
அமைச்சர் உதயநிதி தலைமையில் அமைச்சர் சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு விமானம் மூலம் ஒடிசா பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்திற்கு முன்பு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி, இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது சரியாக தெரியவில்லை.
இதுவரை வந்த தகவல்கள் கேட்டு வருத்தம் அடைந்தேன், ஒடிசாவிற்கு நேரில் சென்று பார்த்த பின் சரியான தகவல் தெரிவிக்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…