லாரி- தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து… ஓட்டுநர்கள் 2 பேர் உயிரிழப்பு !

Published by
murugan

உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி -சென்னை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து எதிரே வந்த லாரியில் மோதியதில் ஓட்டுநர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இந்த கோர சம்பவத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேற்று இரவு விபத்தில் சிக்கிய பேருந்து சென்னையிலிருந்து அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தது அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்து பேருந்து எதிர் திசையை நோக்கி சென்றது. அந்த நேரத்தில் எதிர் திசையில் இருந்து திருச்சியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியில் ஆம்னி பேருந்து மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டிரைவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 20 பயணிகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Recent Posts

“ஈரான் ராணுவத் தளபதி அலி ஷத்மானி கொல்லப்பட்டார்” – இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு.!

தெஹ்ரான் : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தீவிரம்…

4 minutes ago

ஒரே இடத்தில் வைத்து ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை.!

திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில்…

41 minutes ago

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.., சாலையோரம் நின்றிருந்த 2 பெண்கள் பரிதாப பலி.!

திருப்பூர் : பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லாரியின் அதிக…

54 minutes ago

மதுரை எய்ம்ஸ்: “கற்பனை காட்சிக்கே 10 வருஷமா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!

சென்னை : 2019-ல் மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், இதன் 3D வடிவமைப்பு வீடியோ இன்றைய தினம்…

1 hour ago

கீழடி ஆய்வு மேற்கொண்ட அமர்நாத் இடமாற்றம் – மத்திய தொல்லியல் துறை உத்தரவு.!

சென்னை : கீழடி அகழாய்வு தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் 2014 முதல் நடைபெற்று…

2 hours ago

எப்படி இருக்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை? 3டி காட்சி வெளியீடு.!

மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், தோப்பூர் பகுதியில் 222 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுவதற்கு மத்திய…

2 hours ago