மின் விளக்குகளை அணைத்தாலும் மற்ற மின் சாதனங்களை இயக்கலாம் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்க்கு எதிராக நாம் ஒற்றுமையாக இருப்பதை இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து தீபம், மெழுவர்த்தி ஏற்றி ஒளிர விட வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
எனவே தமிழக மின்சார வாரியம் ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் மின்சாரம் பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்பதால் சில நடவடிக்கைகளை எடுத்தது.அதாவது,இன்று இரவு அனைத்து செயற்பொறியாளர்கள் பணியில் இருக்க வேண்டும் என்றும் சரியாக 9 மணிக்கு மின்சாரம் சரியான அளவில் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தது.தமிழகத்தில் இன்று இரவு 9.00 மணி முதல் 9.09 மணி வரை வீட்டின் மின் விளக்குகளை மட்டும் அணைக்க வேண்டும் என்றும் இதர மின்சாதனங்களை அணைக்க வேண்டாம் என்றும் மின்சாரவாரியம் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை மக்கள் அணைத்தாலும் மற்ற மின் சாதனங்களை இயக்கலாம் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.மேலும் மின் சாதனங்களுக்கு பழுது ஏற்படுமோ என மக்கள் அச்சப்பட தேவையில்லை.மருத்துவமனைகளில் மின் விளக்குகள் அணைக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…