சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுதிறனாளிகளுக்கான நடைப்பாதையை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்.
சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்காக பல பிரத்தியேகமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்காக மெரினா கடற்கரையில் மரப்பாதையை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன்பின் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மாற்றுத்திறனாளிகள் உடன் கடல் பரப்பு வரை சென்று அவர்கள் கடலில் கால் நினைப்பதை கண்டு மகிழ்ந்தனர்.
சென்னை மாநகராட்சி சார்பில் 15 மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலியுடன் நடைபாதை திறக்கப்பட்டுள்ளது. இந்த சக்கர நாற்காலிகள் கடல் பரப்பிலும் தண்ணீரிலும் சுலபமாக செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை ஜனவரி 16 ஆம் தேதி வரை உபயோகத்தில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…
லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து…