[Image Source : Mint]
16 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.56,415 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்.
மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கு சிறப்பு உதவி திட்டத்தின் 2023-24 கீழ் 16 மாநிலங்களுக்கு 56,415 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம், குடிநீர் வழங்கல், மின்சாரம், சாலைகள், பாலங்கள் மற்றும் ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், அதிகபட்சமாக, பீகாருக்கு, 9,640 கோடி ரூபாயும், மத்திய பிரதேசத்திற்கு, 7,850 கோடி ரூபாயும், மேற்கு வங்காளத்திற்கு, 7,523 கோடி ரூபாயும், ராஜஸ்தானுக்கு, 6,026 கோடி ரூபாயும், ஒடிசாவுக்கு 4,528 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.4,079 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.3,647 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறைந்தபட்சமாக கோவாவுக்கு ரூ.386 கோடி, அதைத் தொடர்ந்து சிக்கிமுக்கு ரூ.388 கோடியும், மிசோரமுக்கு ரூ.399 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2023-24 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, 24 நிதியாண்டில், 50 ஆண்டு கால வட்டியில்லா கேபெக்ஸ் கடன்களாக, மாநில அரசுகளுக்கு மொத்தமாக ரூ.1.3 லட்சம் கோடியை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் ரூ. 81,195 கோடி மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டது.
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…