மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறது மத்திய அரசு – அமைச்சர் உதயநிதி

Published by
பாலா கலியமூர்த்தி

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் வாழ்க்கையில் மத்திய அரசு விளையாடுகிறது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்டது வருந்தத்தக்க விஷயம். மாணவர் ஜெகதீஸ்வரன் இழப்பை கொச்சைப்படுத்தும் விதம் கண்டிக்கத்தக்கது.

நீட் தேர்வால் மாணவர், அவரது தந்தை தற்கொலை செய்துகொண்டது மிகுந்த வேதனை அளிக்கக்கூடியது. மாணவர்கள் எந்த தவறான முடிவும் எடுக்கக்கூடாது. நீட் தேர்வை ரத்து செய்யும் வரை திமுக சட்ட போராட்டத்தை தொடர்ந்து நடத்தும். நீட் தேர்வு விவகாரத்தில் மக்களின் மனநிலை தெரியாமல் ஆளுநர் அவருக்கென்று ஒரு தனி மனநிலையில் பேசுகிறார்.

எனவே, மாணவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும், முதலமைச்சர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். கடந்த முறை நான் டெல்லி சென்று பிரதமர் மோடியை பார்த்தபோதும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளேன். திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனால் மாணவர்கள் இதுபோன்ற தவறான முடிவை இனி எடுக்க கூடாது என்றும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் காலம் விரைவில் வரும் எனவும் கூறினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

11 hours ago

மகாராஷ்டிரா தேர்தல்: ”வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக” – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!

மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…

12 hours ago

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…

12 hours ago

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…

13 hours ago

நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…

13 hours ago

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

14 hours ago