யூடிபர் மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி.
யூ-டியூபர் மதன்,பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ கேம்களை லைவ்வாக விளையாடி யூ-டியூபில் பதிவேற்றம் செய்து வந்தார். பின்னர்,இந்த வீடியோக்களானது, வீடியோ கேம் பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, மதன் பிரபலமானார்.
இந்நிலையில், பெண்கள் குறித்து ஆபாசமாக அநாகரிகமான முறையில் பேசியதையடுத்து, இவர் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து, யூ-டியூபர் மதன் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக மதனை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், மதன் விசாரணைக்கு ஆஜரகாமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், தருமபுரியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த போது, தனிப்படை போலீசாரால், ஜூன் 18-ம் தேதி கைது செய்யப்பட்டடார்.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்குமாறு பப்ஜி மதன் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் அவரது மனைவியான கிருத்திகா 8 மாத குழந்தையுடன் சிறையில் இருந்த நிலையில், கிருத்திகாவுக்கு ஜாமீன் வழங்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…