மதிமுக பொதுச்செயலாளராக மீண்டும் வைகோ, அவை தலைவராக அர்ஜுன் ராஜ் – ஜூன் 3-ல் அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

மதிமுக பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் போட்டியின்றி தேர்வாகிறார்.

மதிமுகவில் உட்கட்சி தேர்தல் வரும் ஜூன் 14-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் மதிமுகவைச் சேர்ந்த பலர் போட்டியிடுகின்றனர். ஜூன் 1-ம் தேதி வேட்புமனுவை திரும்ப பெற  கடைசி நாள் என்றும், ஜூன் 14-ம் தேதி நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் போட்டியின்றி தேர்வாகிறார். மதிமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் வைகோ போட்டியின்றி தேர்வாகவுள்ளார். இதுபோன்று, மல்லை சத்யா உள்ளிட்ட 5 பேர் மதிமுகவின் துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு ஜூன் 3-ல் வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும், மதிமுக அவை தலைவராக திருப்பூர் துரைசாமிக்கு பதில் அர்ஜுன் ராஜ் போட்டியின்றி தேர்வாகவுள்ளார். துரை வைகோ முதன்மை செயலாளராகவும், பொருளாளராக செந்திலதிபனும்  உள்ளிட்ட நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜூன் 14 கட்சியின் பொதுக்குழு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

1 hour ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

1 hour ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

2 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago