[Image Source : FACEBOOK/VAIKO]
மதிமுக பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் போட்டியின்றி தேர்வாகிறார்.
மதிமுகவில் உட்கட்சி தேர்தல் வரும் ஜூன் 14-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் மதிமுகவைச் சேர்ந்த பலர் போட்டியிடுகின்றனர். ஜூன் 1-ம் தேதி வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் என்றும், ஜூன் 14-ம் தேதி நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் போட்டியின்றி தேர்வாகிறார். மதிமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் வைகோ போட்டியின்றி தேர்வாகவுள்ளார். இதுபோன்று, மல்லை சத்யா உள்ளிட்ட 5 பேர் மதிமுகவின் துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு ஜூன் 3-ல் வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும், மதிமுக அவை தலைவராக திருப்பூர் துரைசாமிக்கு பதில் அர்ஜுன் ராஜ் போட்டியின்றி தேர்வாகவுள்ளார். துரை வைகோ முதன்மை செயலாளராகவும், பொருளாளராக செந்திலதிபனும் உள்ளிட்ட நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜூன் 14 கட்சியின் பொதுக்குழு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…