மாநிலங்கவையில் நேற்று முன்தினம் மருத்துவ ஆணையம் மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்றது.இந்த விவாதத்தில் ஒரு சில மாநில எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் பேசினார்கள்.இவர்களின் பேசியதற்கு பின்னர் மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் பேசினார்.ஆனால் அவர் ஹிந்தியில் பேசினார்.அவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று எழுந்து பேசிய மதிமுக எம்.பி.வைகோ,இது மருத்துவம் தொடர்பான விவாதம் ,எனவே நீங்கள் ஆங்கில மொழியில் தான் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.ஹிந்தியில் பேசினால் நுணுக்கமான சில வார்த்தைகள் புரியாது என்றும் தெரிவித்தார்.
வைகோவின் இந்த பேச்சுக்கு ஒரு சில எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் இந்தியில் தான் பேச வேண்டும் என்று முழக்கமிட்டனர்.இதற்கு உடனே பதில் அளித்து பேசிய வைகோ,உங்களுக்கு இந்தியா வேண்டுமா?இல்லை இந்தி வேண்டுமா ? என்று கேள்வி எழுப்பினார்.மேலும் உங்களின் இந்த இந்தி வெறி இந்தியாவை உடைந்துவிடும் என்றும் தெரிவித்தார்.இதற்கும் ஒரு சில எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.வைகோவும் ஒழியட்டும் இந்தி ஆதிக்கம் என்று முழக்கமிட்டார்.இதனையடுத்து அவைத் தலைவர் வெங்கையா நாயுடு இந்திய நாட்டின் அனைத்து மொழிகளிலும் இங்கே பேசலாம் என்று தெரிவித்தார்.
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…