தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்கும் இலங்கையின் உத்தரவு தொடர்பாக பிரதமர் மோடிக்கு வைகோ கடிதம்.!

Published by
Ragi

தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்கும் இலங்கையின் உத்தரவு தொடர்பாக பிரதமர் மோடிக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையில் அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் நேற்றைய தினம் உத்திரவிட்டிருந்தது . இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக பொது செயலாளருமான வைகோ அவர்கள் கடிதம் ஒன்றை பிரதமர் மோடி மற்றும் அயலுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் எழுதியுள்ளார்.

அதில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதில் 60-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டனர் .  அதனுடன் பல மீனவர்களை சிறைப்பிடித்ததுடன் அவர்களது வாழ்வாதாரமான விசைப்படகுகளையும் காவலில் வைத்தனர் . அவர்கள் சிறைப்பிடிக்கும் ஒவ்வொரு படகின் மதிப்பும் 25 லட்சம் முதல் 40 லட்சம் வரை .அதனை பல மீனவர்கள் வட்டிக்கு வாங்கிய பணத்தில் வாங்கியது .

கடந்த 50 ஆண்டுகளாக தொடரும் இலங்கையின் அத்துமீறல்களை தடுக்குமாறு பல கோரிக்கைகளை வைத்தும் பலனில்லை .இப்போது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான 121 படகுகளை அளிக்குமாறு இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது . எனவே இந்த பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும்,  அவர்களிடமிருந்து மீனவர்களின் படகுகளை மீட்டு தரவோ அல்லது அதற்கான இழப்பீட்டு தொகையை பெற்று தர வேண்டும் என்றும், இதில் தாங்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று வைகோ அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

வெற்றிகரமாக பூமிக்கு வந்தடைந்த டிராகன் விண்கலம்.., வரலாறு படைத்தார் சுபான்ஷு சுக்லா.!!

வெற்றிகரமாக பூமிக்கு வந்தடைந்த டிராகன் விண்கலம்.., வரலாறு படைத்தார் சுபான்ஷு சுக்லா.!!

கலிபோர்னியா : சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேருடன் புறப்பட்ட டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 22…

19 minutes ago

ஓரணியில் இருந்தால் டெல்லி அணியின் திட்டம் பலிக்காது – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

கடலூர் :  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15, 2025) கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.…

37 minutes ago

‘குறிஞ்சிப்பாடியில் காலணி தொழில் பூங்கா’ – முதல்வர் அறிவிப்பு!

கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15, 2025) கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.…

1 hour ago

பண்ட் அவுட் ஆனார் போட்டி மாறிடுச்சு! தோல்வி குறித்து கில் ஸ்பீச்!

லண்டன் :  ஜூலை 10 முதல் 14 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட்…

2 hours ago

நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது ஒத்திவைப்பு?

டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, கடந்த 2017-ஆம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தியை கொலை…

2 hours ago

எங்கள் உள்ளம் கலங்குகிறது…சண்டைக்கலைஞர் மோகன்ராஜ் உயிரிழப்பு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித்!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது…

3 hours ago