180 கி.மீ வேகத்தில் பறக்கும் வந்தே பாரத் மெட்ரோ.! தமிழகத்தில் சோதனை ஓட்டம் தொடக்கம்.!

Published by
மணிகண்டன்

சென்னை : வந்தே பாரத் ரயில் சேவையை தொடர்ந்து வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவையும் தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளது. சென்னை பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் ஏற்கனவே வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வரும் சூழலில், வந்தே பாரத் மெட்ரோ ரயில் பெட்டி தயாரிக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே, வந்தே பாரத் ரயில் பெட்டி தயாரித்து முடித்து சோதனை ஓட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்ததாக வந்தே பாரத் மெட்ரோ ரயில் பெட்டி தயாரிப்பு நிறைவடைந்து இன்று வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவை சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, இன்று சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் மெட்ரோ ரயில் கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து காலை 9.30 மணிக்கு ரயில் புறப்பட்டு, காலை 10.10க்கு வில்லிவாக்கத்தை அடைந்து இருக்கும் என்றும் அடுத்து, காலை 10.15 மணிக்கு  வில்லிவாக்கத்தில் இருந்து புறப்பட்டு, அரக்கோணம் வழியாக காலை 11.55 மணிக்கு காட்பாடியை சென்றடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, காட்பாடியில் இருந்து பகல் 12.15 மணிக்கு ரயில் புறப்பட்டு, பிற்பகல் 2 மணி அளவில் சென்னை கடற்கரையை வந்தே பரத் மெட்ரோ ரயில் சேவை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தின் போது, மணிக்கு 180 கி.மீ வேகம் வரை ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் நிறைவடைந்த பிறகு, ரயில் சேவை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

7 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

7 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

8 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

9 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

10 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

10 hours ago