VandeBharath 3tn [Image-HT]
சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் தமிழகத்தின் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி, வரும் ஆகஸ்ட்-6 ஆம் தேதி கொடியசைத்து துவங்கி வைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் அதிவிரைவு ரயில் என அழைக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை-நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலோடு தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் மூன்றாவது அதிவிரைவு ரயில் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் 658 கிமீ தொலைவை 8 மணிநேரத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கடக்கும் எனவும்,எட்டு பெட்டிகளுடன் இயக்கப்படும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுரை மற்றும் திருச்சி என இரண்டு நிறுத்தங்களில் மட்டும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை-மைசூர் மற்றும் சென்னை-கோவையை அடுத்து வரும் ஆகஸ்ட்-6 ஆம் தேதி முதல் தமிழக்தில் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. தனது சொந்த…
திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் (101) கடந்த ஜூலை 21ம்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு, 'இராசேந்திர சோழன் உருவாக்கிய அரியலூர் சோழகங்கம்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இரண்டு…
சென்னை : தமிழ்நாடு தனிநபர் வருமானத்தில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது…
சென்னை : நடிகர் சூர்யா பிறந்தநாளை ஒட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘கருப்பு’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. சூர்யாவின்…