உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை மேல்முறையீடு செய்வது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை ஈடுபட்டுள்ளார்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய முந்தைய அதிமுக அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து எழுத்து 25-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர். முறையாக சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தங்கள் மனுவில் தெரிவித்து இருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்ற மதுரை கிளை வன்னியர் சமூகத்தினருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்து நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் தீர்ப்பளித்தனர்.
இதைத்தொடர்ந்து, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்தான நிலையில் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிமற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், வன்னியர்களுக்கான 10.5 சதவீத ஒதுக்கீடு ரத்து எதிர்த்து மேல்முறையீடு செய்ய பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தார்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…