[Representative Image]
சென்னை கே.கே. நகரில் விசிக நிர்வாகி தேநீர் கடைக்கு சென்ற போது மர்ம நபர்களால் வெட்டி கொலை.
சென்னை கே.கே. நகரில் BSNL அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் (எ) குட்டி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இன்று அதிகாலை தேநீர் கடைக்கு விசிக நிர்வாகி சென்ற போது இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. காரில் வந்த 2 நபர்கள் ரமேஷை சரமாரியாக வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதற்கட்டமாக விசாரணையில் முன்விரோத காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் குன்றத்தூர் அருகே விசிக நிர்வாகி அதிஷ் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை கே.கே. நகரில் BSNL அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் வெற்றி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…