சென்னை:கடந்தாண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சீன தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர் பழனி அவர்களுக்கு வீர் சக்ரா விருது அளித்திருப்பது பெருமைக்குரியது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி, கடந்தாண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சீன தாக்குதலில் உயிரிழந்தார். இதனையடுத்து,அவருக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று ஹவில்தார் பழனி சார்பில் அவரது மனைவியிடம், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மகாவீர் சக்ரா விருதை வழங்கினார்.
உயிரிழந்த இராணுவ வீரர் பழனி அவர்களுக்கு வீர் சக்ரா விருது அளித்திருப்பது பெருமைக்குரியது என்றும்,அவரது வீரம் நாட்டுபற்றறின் அடையாளம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“வரலாற்றில் நிறைந்து வாழும் இராணுவ வீரர் பழனி அவர்களுக்கு வீர் சக்ரா விருது அளித்திருப்பது பெருமைக்குரியது. கல்வான் பள்ளத்தாக்கில் அவர் காட்டிய தீரம் தமிழர்களது நாட்டுப்பற்றின் அடையாளம்”,என்று பதிவிட்டுள்ளார்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…