வேல்முருகன் ஆர்ப்பாட்டம் – தமிழக வேலை தமிழர்களுக்கே.!

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் வேல்முருகன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதாவது, தமிழக வேலை தமிழருக்கே என்ற கோரிக்கையை முன்வைத்து சமூக இடைவெளியுடன் கையில் பதாகைகளை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக  தமிழக அரசு பணிகளை 100% தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், தமிழகத்தில் தமிழர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுகிறது என்றும் வடமாநிலத்தை சேர்ந்த இந்தியை தாய் மொழியாக கொண்ட உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு பணிக்கு அமர்த்தப்பட்டு வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த வாரம் திருச்சி பொன்மலை ரயில்வே துறைக்கு ஆள் சேர்ப்பு பணியில் எந்த விதிமுறையும் பின்பற்றாமல் அவர்களுக்கு 435 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று என்.எல்.சி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இப்படி அனைத்து நிறுவனங்களிலும் வடமாநிலத்தவர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர் என கூறியுள்ளார். மேலும், இந்த மண்ணில் ஆயிரம் பணியிடங்கள் இருக்கிறது என்றால் அதில் குறைந்தபட்சம் 900 பணியிடங்களை இந்த மண்ணின் மக்கள் பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் நல்ல கல்வித் தகுதியுடன் லட்சக்கணக்கான மாணவர்கள் குவிந்து இருக்கின்றார்கள். ஆனால் வட இந்தியர்களை நியமனம் செய்வதில் என்ன நியாயம் எனக் கேள்வி எழுப்பினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…

15 minutes ago

திருப்பூரில் பரபரப்பு: இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.!

திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…

29 minutes ago

“சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் உள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி பளிச்.!

சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…

40 minutes ago

ரிஷப் பண்ட்-க்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் – ஐசிசி அதிரடி.!

லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…

43 minutes ago

“இந்தியரின் விண்வெளி பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்” – ஸ்பேஸ் எக்ஸ்.!

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…

2 hours ago

Ostrava Golden Spike : ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா.!

மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…

2 hours ago