டாஸ்மாக் பார்களை மூடுவதற்கான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு விஜயகாந்த் வரவேற்பு.!

Default Image

டாஸ்மாக் பார்களை மூடுவதற்கான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு.

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ள பார்களை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெரும்பாலானோர் மதுபழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சீரிழித்து வருகின்றனர். மதுபோதைக்கு அடியானவர்களின் பல குடும்பங்கள் சின்னாபின்னமாகி வருகின்றன.

மதுவால் இளம்வயதிலேயே கணவனை இழந்து விதவையாகிப் போன பெண்கள் பலர் உள்ளனர். தமிழகத்தில் நடைபெறும் பல குற்றசம்பவங்களுக்கு மதுதான் காரணமாக அமைகின்றன. மது பழக்கத்துக்கு அடிமையானவர்கள் பண தேவைக்காக, செயின் பறிப்பது, பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு தங்கள் எதிர்காலத்தையே வீணடித்துக் கொள்கின்றனர்.

மதுக்கடைகளில் 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யக் கூடாது என்று சட்டம் இருந்தாலும், பள்ளி சீருடை அணிந்து மதுக்கடைகளில் மது பாட்டில்களை வாங்கும் மாணவர்களின் புகைப்படங்கள், போதையில் கலாட்டாவில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதை பார்க்க முடிகிறது. அதோடு, சாலை விபத்துகள் அதிகரிப்புக்கும் மது தான் மூலகாரணமாக உள்ளது.

இவ்வாறு தமிழகமே மதுவால் சீரழிந்து வரும் நிலையில், டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார். go

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்