விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வசித்து வந்தார் சேதுபதி. இவர் அப்பகுதியில் பஞ்சர் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இவர் முருகவேணி எனும் பெண்ணை காதலித்து 20 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான நாள் முதல் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. முக்கியமாக முருகவேணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு குடிப்பழக்கமும் அதிகமாக இருந்துள்ளதாம்.
அதனால் கோபமடைந்த முருகவேணி, சேதுபதி குடித்துவிட்டு தூங்குகையில், அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு முருகுவேணி சென்றுவிட்டார். தீப்பற்றியதும் சேதுபதி அலறியுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அனைக்க முற்பட்டனர். ஆனால், அது கூரை வீடு என்பதாலும், காற்று அதிகமாக வீசியதாலும் தீ வேகமாக பரவியது. பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்துள்ளனர். அதற்குள்ளாக சேதுபதி உடல் கருகி இறந்துவிட்டார்.
இந்த சம்பத்தை தொடர்ந்து முருகவேணியை கைது செய்து விசாரித்து வருகையில் இந்த தகவல்களை கூறியுள்ளார். மேலும், முருகவேணியின் தயாரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…