தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விக்டோரியா கல்லூரியில் உள்ள மாணவர் கல்லூரி விடுதி கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றப்பட்டு வரும் நிலையில், அங்கு ஆய்வுகளை மேற்கொண்டபின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசிய அவர், கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளதாக கூறினார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என எச்சரித்த அவர், சென்னையில் மொத்தமாக 18,852 படுக்கைகள் உள்ளதாக கூறினார்.
இந்திய பாதிப்பில் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு 3% ஆக உள்ளதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி, சென்னையில் உள்ள விக்டோரியா கல்லூரியில் உள்ள மாணவர் கல்லூரி விடுதியில் 570 படுக்கைகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…