தண்ணீர், உணவு இல்லை.! மருத்துவர்கள் போராட்டம்.!

Published by
murugan

தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட சென்னைக்கு அடுத்த இடத்தில் கோவை தான் உள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.மருத்துவமனை மற்றும்  சில தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கொடுக்கப்பட்டு  வருகிறது.
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படித்துவரும் பயிற்சி மருத்துவர்கள் பலர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். அப்படி சிகிச்சையளித்து வந்த இரண்டு மருத்துவர்களுக்குக் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களுக்காக இயங்கி வந்த கேன்டீன் முன் அறிவிப்புமின்றி மூடப்பட்டது.இதனால் விடுதியில் தங்கியுள்ள மருத்துவர்கள் உணவு கிடைக்காமல் தவித்தனர்.
இதுதொடர்பாக மாணவர்கள் மருத்துவமனை டீனுக்கு மனு கொடுத்தனர்.மேலும் ட்விட்டரில் அமைச்சர் சுகாதாரத்துறைச் செயலாளருக்கும் டேக் செய்து கோரிக்கை வைத்தனர்.இதற்கு பதிலளித்த பீலா ராஜேஷ்,கோவை கலெக்டருடன் பேசிவிட்டேன். அங்கு உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது’ என்று கூறினார்.
இதுகுறித்து, மருத்துவர்கள் கூறுகையில் , ஊரடங்கு உத்தரவால் நாங்கள் வெளியில் எங்கும் போக முடியவில்லை. கேன்டீனில் இருந்த உணவைத்தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.
இரண்டு மருத்துவர்களுக்குக் கொரோனா பாதிக்கப்பட்டதால் கேன்டீனைத் திடீரென்று மூடிவிட்டனர். இங்கு 600 பேர் இருக்கிறோம். எங்களுக்குத் தரமான உணவு, தண்ணீர் கொடுங்கள் என டீன் அறை முன்பு  போராட்டம் நடத்தினோம். மருத்துவமனை நிர்வாகம் எங்கள் கோரிக்கைகளை கேட்கவில்லை.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் கூறுகையில் ,கொரோனா பாதித்த மருத்துவர்கள் அங்கு சென்றதால் கேன்டீனைப் பூட்டிவிட்டனர். மருத்துவமனை நிர்வாகம்தான் உணவுக்கான மாற்று ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் என்னிடம் பேசினர். மருத்துவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கிடைக்க  நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…

6 minutes ago

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

3 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

5 hours ago