மேகதாது அணை விவகாரம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் துரைமுருகன் முக்கிய ஆலோசனை.!

Published by
மணிகண்டன்

மேகதாது விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தற்போது கர்நாடக மாநில அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. இதுகுறித்து அம்மாநில துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என குறிப்பிட்டு இருந்தார் .

இந்த விவகாரம் குறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவேரி நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் தான் இதில் முடிவு எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பேச்சுவார்த்தை நடத்த கூடாது என தெரிவித்து இருந்தார்.

தற்போது, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

17 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

1 hour ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

1 hour ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

3 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago