அதிமுகவுக்கு எதிராக பாஜக வினையாற்றினால் நாங்கள் எதிர்வினையாற்ற தயாராக இருக்கிறோம் – ஜெயக்குமார்

Published by
லீனா

அதிமுகவுக்கு எதிராக பாஜக வினையாற்றினால் நாங்கள் எதிர்வினையாற்ற தயாராக இருக்கிறோம் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

அதிமுக – பாஜக இடையே தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், ஒருவரை ஒருவர் விமர்சித்தும் வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சந்தித்திருந்தார்.

இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது என தெரிவித்திருந்தார். இதற்கிடையில், அதிமுகவுக்கு வசீகரமும், சரியான தலைமையும் தற்போது இல்லை என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சித்திருந்தார்.

அண்ணாமலை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

[Image source : PTI]

இதற்க்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான அதிமுகவினர் சந்திப்பை பாஜக நிர்வாகிகள் விமர்சித்ததற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், அதிமுகவை பாஜக நிர்வாகிகள் விமர்சிப்பதற்கு அண்ணாமலை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; அதிமுகவுக்கு எதிராக பாஜக வினையாற்றினால் நாங்கள் எதிர்வினையாற்ற தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

 

Published by
லீனா

Recent Posts

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

12 minutes ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

22 minutes ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

56 minutes ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

2 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

2 hours ago

ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…

2 hours ago