உணவு உள்ளிட்டவை கிடைக்கிறதா என உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கான சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணிநேர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதுவரை சுமார் 1,500 பேர் உதவிக்காக பதிவு செய்துள்ள நிலையில் முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது, உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களிடம் முதலமைச்சர் உரையாடினார். அதில், உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்கள் தைரியமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மாணவர்களிடம் சாப்பாடு உள்ளிட்ட வசதிகள் கிடைக்கிறதா என்றும் கேட்டறிந்தார். விரைவில் உங்களை மீது இந்தியா அழைத்து வந்து விடுவோம், தைரியமாக இருங்கள்.. அதற்கான பணியில் தான் ஈடுபட்டு வருகிறோம் என்று உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ காலில் பேசி, நம்பிக்கையூட்டினார்.
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…
சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…