அனைவரும் முகக்கவசம் அணிந்தபடி செல்ஃபி புகைப்படம் எடுத்து அதனை டிபியாக அனைத்து சமூக வலைதளங்கள பக்கத்திலும் பதிவிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்போது முகக்கவசம் கட்டாயம் என கூறப்படுகிறது.
இந்த கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழக மக்களும் தே.மு.தி.க. நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.’ எனவும்,
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைவரும் முகக்கவசம் அணிந்தபடி செல்ஃபி புகைப்படம் எடுத்து அதனை டிபியாக (ப்ரொஃபைல் போட்டோ) அனைத்து சமூக வலைதளங்கள பக்கத்திலும் பதிவிட்டு முக கவத்தின் அவசியத்தை மக்களுக்கு வலியுறுத்த வேண்டும். மேலும், இந்த விழிப்புணர்வு புகைப்படத்தை மே மாதம் 3-ந் தேதி வரை வைத்திருக்க வேண்டும்’ என விஜயகாந்த் தனது அறிக்கை மூலம் மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…