அனைவரும் முகக்கவசம் அணிந்தபடி செல்ஃபி புகைப்படம் எடுத்து அதனை டிபியாக அனைத்து சமூக வலைதளங்கள பக்கத்திலும் பதிவிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்போது முகக்கவசம் கட்டாயம் என கூறப்படுகிறது.
இந்த கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழக மக்களும் தே.மு.தி.க. நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.’ எனவும்,
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைவரும் முகக்கவசம் அணிந்தபடி செல்ஃபி புகைப்படம் எடுத்து அதனை டிபியாக (ப்ரொஃபைல் போட்டோ) அனைத்து சமூக வலைதளங்கள பக்கத்திலும் பதிவிட்டு முக கவத்தின் அவசியத்தை மக்களுக்கு வலியுறுத்த வேண்டும். மேலும், இந்த விழிப்புணர்வு புகைப்படத்தை மே மாதம் 3-ந் தேதி வரை வைத்திருக்க வேண்டும்’ என விஜயகாந்த் தனது அறிக்கை மூலம் மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…