Cyclone 'Mocha' formed in the Bay of Bengal. [Representational image]
வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுவடைந்தது.
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ‘மோச்சா’ புயலாக உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘மோச்சா’ புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் அதி தீவிர புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது.
‘மோச்சா’ என பெயரிடப்பட்டுள்ள புயல் வங்கதேசம், மியான்மர் அருகே நிலை கொண்டுள்ளது. மே 14ம் தேதி ‘மோச்சா’ புயல் வங்கதேசம் – மியான்மர் இடையே புயல் கரையை கடக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதால் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தி வீசக்கூடும். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக எனவும் கூறப்படுகிறது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…