தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் வாக்களிக்க பயன்படுத்தக் கூடிய ஆவணங்கள் குறித்த விவரங்களை தமிழக தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், 3,18,28,727 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6,26,67,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
இந்த தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் மக்கள் சிரமின்றி வாக்களிக்கவும், அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீசார், துணை ராணுவத்தினர் உள்ளிட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்நிலையில், வாக்காளர்கள் வாக்களிக்க பயன்படுத்தக் கூடிய ஆவணங்கள் குறித்த விவரங்களை தமிழக தலைமை தேர்தல் ஆணையம், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ஓட்டுநர் உரிமம், கடவுச் சீட்டு, மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, பாராளுமன்ற, சட்டமன்ற பேரவை, சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை உள்ளிட்டவையும்,
அரசு பணியாளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓய்வூதிய ஆவணம், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை (வோட்டர் ஐடி) ஸ்மார்ட் கார்டு, கணக்கு புத்தகங்கள் (வங்கி, அஞ்சலங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்டவை), மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை அரசு உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வாக்குச்சாவடிக்கு எடுத்துச்சென்றால் மட்டுமே வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பூத் சீட் இல்லாவிட்டாலும் ஸ்லிப்-ல் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, வாக்காளரின் பாதுகாப்பிற்காக முகக்கவசங்கள், கையுறைகள் வாக்குச்சாவடியில் வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…