ஆழ்துளை கிணறு மரணங்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழகத்தை உலுக்கிய சம்பவங்களில் ஓன்று திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத் உயிரிழந்த சம்பவம் ஆகும்.இந்த சம்பவத்தை தொடர்ந்து வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அவரது வழக்கில்,கடந்த 2010 -ஆம்ஆண்டு உச்சநீதிமன்றம் குழந்தைகளை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டுதல்களை வழங்கியது .ஆனாலும் இதன் பின்னர் ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பாக மூடும் நடவடிக்கைகளை அதிகாரிகள் சரியாக மேற்கொள்ளவில்லை என்றும் இதன் விளைவாக ஆண்டுதோறும் ஆழ்துளை கிணறு விபத்துகளில் உயிரிழந்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,ஆழ்துளை கிணறு மரணங்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ? என்று கேள்வி எழுப்பியது.மேலும் ஆழ்துளை கிணறுகளில் விபத்துகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 4 வாரங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிக்கை தாக்க செய்ய உத்தரவு பிறப்பித்தது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…