செந்தில் பாலாஜி என்ன புத்தரா? தவறுகளை மறைக்க ஆளுநரை வில்லனாக காட்ட திமுக முயற்சி – அண்ணாமலை பேட்டி

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் ஆளுநருக்கு மரியாதையே இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.

கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, செந்தில் பாலாஜியை புத்தராகவும், உத்தமராகவும் திமுகவினர் சித்தரிக்கின்றனர். தங்கள் தவறுகளை மறைக்க ஆளுநரை வில்லனாக காட்ட திமுகவினர் முயற்சி செய்து வருகின்றனர். திமுக அரசு நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளை விட்டுவிட்டு ஆளுநரை சீண்டி பார்க்கிறது என குற்றசாட்டியுள்ளார்.

ஆளுநரை ஒருமையில் பேசி, தரக்குறைவாக விமர்சிப்பது மிகவும் தவறானது. எனவே, தமிழகத்தில் ஆளுநருக்கு மரியாதையே இல்லை. தமிழக அரசு கூறுவதை ஆளுநர் அப்படியே ஓப்பிக்க வேண்டுமா? கேள்வி எழுப்பிய அவர், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று நானே சொல்லி இருக்கிறேன் எனவும் குறிப்பிட்டார். தமிழகத்தில், ஆளுநருக்கும், திமுக அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் மாறி மாறி குற்றசாட்டை முன்வைத்து விமர்சித்து வருகின்றனர்.

அதுவும் தற்போது செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடு குறித்து திமுக கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் செந்தில் பாலாஜி விகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?, அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை ரத்து செய்வாரா அல்லது செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு ஒப்புதல் அளிப்பாரா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருடன் ஆளுநர் ஆர்என் ரவி சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மதராஸி திரைப்படத்தின் முதல் பாடலான ”சலம்பல” ப்ரோமோ வெளியீடு.!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…

5 hours ago

“இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கினோம்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பிரதமர் விளக்கம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…

5 hours ago

நாளை விண்ணில் பாயும் ”நிசார்” செயற்கைக்கோள்.! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.!

ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…

6 hours ago

”இதற்குமேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது” – பிரதமர் மோடி.!

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…

7 hours ago

அதிபர் டிரம்பிடம் இதையெல்லாம் கேட்க முடியுமா? – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்.!

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…

7 hours ago

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.., வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…

8 hours ago