இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் மாநிலம் உத்தரப்பிரதேசம் தான் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின், தமிழகத்தில் திமுகவால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதமரும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகின்றனர். தமிழகத்தையும், திமுகவையும் பற்றி பேச பிரதமர் மோடிக்கும், உ.பி. முதல்வருக்கும் எந்தவித தகுதியும் கிடையாது.
இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் மாநிலம் உத்தரப்பிரதேசம் தான். பாஜக அரசு ஆளும் உத்தர பிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பின் லட்சணத்தை நாடே அறியும். அங்கிருந்து வந்த யோகி ஆதித்யநாத், திமுக பற்றியும் தமிழகத்தை பற்றியும் பேச என்ன யோக்கியதை இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்ம இருப்பதாக முதலில் கூறியது ஓபிஎஸ் தான். தமிழகத்தில் மோடி எதிர்ப்பலையோடு முதல்வர் பழனிசாமி எதிர்ப்பலையும் வீசுகிறது என்றும் பொள்ளாச்சி கொடூரம் பற்றி பிரதமர் மோடி ஏன் கேட்கவில்லை? எனவும் மேட்டுப்பாளையத்தில் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் பேசியுள்ளார்.
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…