இன்னொரு எஸ்.பி.பி.யை எப்போது காணப் போகிறோம் ? என்று கே.எஸ்.அழகிரி ட்வீட் செய்துள்ளார்.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஸ்.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இந்தியாவின் தலைசிறந்த பாடகரும், 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி உலகப் புகழ் பெற்ற திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட 6 தேசிய விருதுகளைப் பெற்று சர்வதேச அங்கீகாரம் பெற்ற பாடகரை இன்று இழந்திருக்கிறோம். இன்னொரு எஸ்.பி.பி.யை எப்போது காணப் போகிறோம் ? அவரது இடத்தை யாரால் நிரப்ப முடியும் ? அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், லட்சக்கணக்கான ரசிகர் பெருமக்களுக்கும், திரையுலகத்தினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…