யார் அதிகம் நிதியுதவி கொடுத்தது?! உயிரிழப்பில் முடிந்த ரசிகர்கள் மோதல்.!

Published by
மணிகண்டன்

விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா நிவாரணத்திற்கு யார் அதிகம் பணம் கொடுத்தது? விஜயா? ரஜினியா? என்பது தொடர்பாக நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.

கொரோனா நிவாரண நிதியுதவியாக பலரும் தங்களால் இயன்ற நியுதவிகளை அளித்து வருகின்றனர். இதில், திரைப்பட நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், சிவகார்த்திகேயன் என பலர் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வந்தனர்.

விழுப்புரம் மாவட்டம்  மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் முருகன், இவரது மகன் 22 வயதான யுவராஜ் விஜய் ரசிகர் ஆவார். இதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் 22வயதான தினேஷ் பாபு இவர் ரஜினி ரசிகர் ஆவார். இருவருமே நண்பர்கள்.

நேற்று இருவரும் குடிபோதையில், கொரோனா நிவாரணத்திற்கு யார் அதிகம் பணம் கொடுத்தது? விஜயா? ரஜினியா? என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், தினேஷ் பாபு, யவராஜை அடித்து தள்ளிவிட்டதாக தெரிகிறது. இதில் தலையில் அடிபட்டு யுவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தினேஷ் பாபுவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

57 minutes ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

1 hour ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

2 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

3 hours ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

4 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

11 hours ago