#Breaking:”ஒன்றிய அரசு என்று அழைப்பது ஏன்” -முதல்வர் விளக்கம்…!

Published by
Edison

மத்திய அரசை… ‘ஒன்றிய அரசு’ என்று அழைப்பது ஏன் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் தற்போது விளக்கமளித்துள்ளார்.

தமிழக 16 வது சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் கடந்த இரண்டு நாட்களாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. முதல்நாள் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கி பல்வேறு முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன.

அந்த வகையில்,இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமானது இன்று நடைபெற்று வருகிறது.அதில்,முதல்வர் உள்பட அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.அப்போது பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்,”தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மத்திய அரசை ஏன் ஒன்றிய அரசு என அழைக்கிறீர்கள்.அதற்கான விளக்கம் வேண்டும்”,என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில்,இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறியதாவது:”ஒன்றிய அரசு என்று சொல்வதை சமூக குற்றம் என்று சிலர் சொல்கிறார்கள்.ஆனால்,அரசியல் அமைப்பு சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அந்த சொல்லைத்தான் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.

அதுமட்டுமல்லாமல்,1957 ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒன்றிய அரசு என்ற சொல்லை முன்னதாக நாங்கள் பயன்படுத்தியுள்ளோம்.

எனவே,ஒன்றிய அரசு என்பது தவறான சொல் அல்ல.ஒன்றியம் என்பதில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியுள்ளது.அதனால்,ஒன்றிய அரசு என்பதை நாங்கள் எப்போதும் பயன்படுத்துவோம்”,என்று தெரிவித்துள்ளார்.

Published by
Edison

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

1 hour ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

2 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

3 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago