சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்து அறிவிக்கும் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கிறது என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் மாலை 12 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக மத்திய கல்வி உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக்கு பின்னர், கொரோனா பரவல் காரணமாக CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதற்கு பதிலாக நீட் தேர்வை ரத்து செய்யலாம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்து அறிவிக்கும் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கிறது. தமிழ்நாடு அரசு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் சூழ்ச்சி பொறியில் சிக்காமல் மாணவர் நலனை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் எதிர்கால வளர்ச்சி கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமான முடிவு எடுக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசு +2 தேர்வை ரத்து செய்தால் அது தகுதி திறமை பேசி ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக் கண்ணை குத்தும். மருத்துவக் கல்லூரிகளுக்கு தகுதியுள்ள மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய சட்டப்படி உரிமை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…