தமிழக வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்.? தேர்தல் ஆணையர் விளக்கம்.!

Published by
மணிகண்டன்

Election2024 : தேர்தல் அலுவலர்கள் சிலர் சரியாக வாக்குப்பதிவு விவரங்களை தெரிவிக்காத காரணத்தாலே வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏற்பட்டது என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை ஏப்ரல் 19ஆம் தேதி 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் வெளியான வாக்குப்பதிவு சதவீத குளறுபடி தற்போது வரையில் பேசுபொருளாக உள்ளது.

தமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றாலும், 6 மணிக்குள் வாக்குசாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு இரவு 8 மணியை கடந்தும் தேர்தல் நடைபெற்றது. இதனால் துல்லியமான வாக்குசதவீத விவரங்கள் வெளியாகாத சமயத்தில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யப்பிரதா சாகு செய்தியாளர்களிடம் தமிழகத்தில் 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக கூறினார்.

ஆனால், அதனை தொடர்ந்து மறுநாள் (ஏப்ரல் 20)ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, 69.46 சதவீத வாக்குக்களே தமிழகத்தில் பதிவானதாக அறிவித்தது. தேர்தல் ஆணையர் கூறியதற்கும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டதற்கும் 2.63 சதவீதம் வித்தியாசம் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து இன்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு கூறுகையில், வாக்குப்பதிவு சமயத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் தேர்தல் ஆணைய செயலியில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதத்தை பதிவிட வேண்டும். ஆனால் சில தேர்தல் அலுவலர்கள் முறையாக வாக்குப்பதிவு சதவீதத்தை பதிவிடவில்லை. இது அதிகாரபூர்வ உத்தரவு இல்லை என்பதால் சிலர் இதனை பின்பற்றவில்லை.

அந்த தகவலின்படி வாக்கு சதவீதம் கூறப்பட்டதால் சிறிய வேறுபாடு எழுந்துள்ளது. இறுதியாக மாவட்ட தேர்தல் அலுவலர் கையெழுத்திட்டு வரும் வாக்குப்பதிவு சதவீதமே உறுதியான வாக்குப்பதிவு சதவீதம் ஆகும். அதன்படி தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குப்பதிவு என அறிவிக்கப்பட்டுள்ளன என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…

3 hours ago

நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…

3 hours ago

தஞ்சை : நேருக்கு நேர் மோதி கோர விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…

4 hours ago

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு! நடந்தது என்ன?

சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…

5 hours ago

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…

5 hours ago

பிளே ஆப் சென்ற மும்பை….. டெல்லியை வீழ்த்தியதற்கு முக்கிய காரணங்கள் இதுதான்!

மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…

5 hours ago