திருமணமாகி 20 நாட்களில் கணவனை தீவைத்து எரித்த மனைவி!திடுக்கிடும் தகவல்!

Published by
Sulai

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் டி.வி. நகரை சேர்ந்த இளைஞர் சேதுபதி ஆவார்.இவர் புதுவையில் உள்ள ஒரு இரு சக்கர வாகன பஞ்சர் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

இவரும் அதே பகுதியை சேர்ந்த முருகவேணி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பின்னர் இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு கூரை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில் சேதுபதிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.இதன் காரணமாக நேற்று மாலை மதுபோதையில் சேதுபதி வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.

பின்னர் வீடு முழுவதும் மளமளவென தீப்பிடித்து எறிந்துள்ளது.அப்போது உள்ளே தூங்கி கொண்டிருந்த சேதுபதி பதறி எழுந்து கூச்சலிட்டுள்ளார்.அவரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பதறி அடித்து ஓடி வந்துள்ளனர்.

அப்போது அங்கு வீடு தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பின்னர் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர்.ஆனால் அதற்குள் வீடு முழுவதும் தீப்பரவியுள்ளது.உடனே அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் அடைப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்துள்ளனர்.ஆனால் அதற்குள் சேதுபதி தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.இதனை தொடர்ந்து திண்டிவனம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.

பின்னர் சேதுபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.தீவிபத்து ஏற்பட்டபோது முருகவேணி வீட்டில் இல்லாததை உறுதி செய்த காவல்துறையினருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அப்போது திருமணம் ஆகிய நாளிலிருந்து கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்தது.

மேலும் முருகவேணியின் மீது சேதுபதிக்கு சந்தேகம் ஏற்பட்டதன் காரணமாக அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த முருகவேணி சேதுபதியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அப்போது மதுபோதையில் உறங்கிக்கொண்டிருந்த சேதுபதியின் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீயை பத்த வைத்து விட்டு வெளியே கதவை மூட்டி சென்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இதனை காரணமாக காவல்துறையினர் முருகவேணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

7 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

9 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

12 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

13 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

15 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

16 hours ago